ஐக்கிய ராஜ்ஜியத்தில் (United Kingdom - UK) 10.09.2010 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளையொட்டி 18.09.2010 அன்று ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் சார்பில் இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Northampton நகரில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில், மன்றத்தின் இளைஞர் குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
காலையில் அரட்டையும், அதனைத் தொடர்ந்து பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கும் புல் தரையில் க்ரிக்கெட் விளையாட்டும் நடத்தப்பட்டது.
பின்னர் அனைவருக்கும் சுவைமிக்க மதிய உணவு விருந்தாக பரிமாறப்பட்டது