ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, 09.04.2016 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
Time:
11.00 A.M to 06.00 P.M.
Venue:
மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது.
Shenfield Parish Hall
60 Hutton Road
Brentwood
CM15 8LB
இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி‘ மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது.
எனவே, தாங்களனைவரும் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு, அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்க வருமாறும், இத்தகவலை தங்களுக்கு அறிமுகமான நம் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்குத் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்கச் செய்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்பொதுகுழுவின் உள்ளூர் பிரிதிநிதியாக, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஹசன் மரைகார் அவர்கள் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.