அன்பின் ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). துவக்கமாக உங்கள் யாவருக்கும் நம் மன்றத்தின் சார்பில் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறோம் - ஈத் முபாரக்!
நமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் நான்காவது பொதுக்குழுக் கூட்டம் ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக, இன்ஷா அல்லாஹ் வருகிற இம்மாதம் 10ஆம் தேதி, லண்டன் மாநகரின், ஹூலி என்ற புறநகர் பகுதியில் அமைந்துள்ள கிராம சமுதாய அரங்கில் (Village Community Centre) காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
Time: 11.00 A.M to 05.00 P.M.
Venue: Hooley Village Hall Association, St.Margaret's Road, HooleyCR5 3RB
இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி‘ மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிருப்பதற்காக, இந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, கூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும், மகிழ்விக்கவும் அன்புடன் அழைக்கிறோம்.
உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.