வரும் ஏப்ரல் 24ஆம் தேதி யுனைட்டெட் கிங்டம் (யு.கே.) காயல் நல மன்ற துவக்க விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சார்ந்த - குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர் தம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த யு.கே. காயலர் சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுனைட்டெட் கிங்டம்) காயல் நல மன்றம் அமைப்பைத் துவக்குவதற்கான ஆலோசனைக் கூட்ட அழைப்பிதழ் ஓரிரு வாரங்களுக்கு முன் நமது காயல்பட்டினம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதோடு, இதுவரை நாங்கள் சேகரித்துள்ள யு.கே. வாழ் காயலர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
இன்ஷாஅல்லாஹ், திட்டமிட்டபடி துவக்கவிழா, 24.04.2010 அன்று மாலை 4.30 மணிக்கு,
LAHORI PALACE,
427, High Street North,
Manor Park, London E12 6TL
என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
நமதூரைச் சார்ந்த புகழ்பெற்ற குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி அவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் அனைத்து காயலர் சகோதர - சகோதரிகளே! தங்களுக்கு பல்வேறு பணிச்சுமைகள் இருக்கும் என்பதை நாங்கள் நன்கறிவோம். எனினும், தயவுசெய்து, 24.04.2010 அன்று நடைபெறவுள்ள நமது அமைப்பின் துவக்கிவிழாவிற்கு மட்டும் தங்கள் மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கித் தந்து, விழாவில் தவறாமல் கலந்துகொண்டு, நல்ல பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிடுமாறு நம் நகர் நலன் கருதி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு:
நமது புதிய அமைப்பு குறித்த தகவல்களை, www.kayalpatnam.org.uk என்ற வலைதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற
ஒருங்கிணைப்புக் குழு சார்பாக,
ஹாஃபிழ் எம்.எல்.அப்துல் மத்தீன்,
லண்டன், ஐக்கிய ராஜ்ஜியம்.